28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் உலகம்

கணவன்-மனைவி ஒன்றாக உணவருந்த தடை!!!

ஆப்கானிஸ்தானில்  உள்ள உணவகங்களில் கணவன்- மனைவி ஒன்றாக அமர்ந்து உணவருந்த அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் வந்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெண்கள், தலை முதல் கால் வரை முழுமையாக மூடும்படியான பர்தா அணிந்து வெளியே வரவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் சமீபத்தில் ஹெராத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் மேலாளர் அங்கு உணவருந்த வந்த தம்பதியை தனித்தனியாக உட்கார சொன்னதாக ஆப்கன் பெண் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதனை மேற்கோள்காட்டி, ஆப்கானிஸ்தானின் நல்லொழுக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான அமைச்சகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, உணவகங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக அமர வேண்டும் எனவும், கணவன் – மனைவியாக இருந்தாலும் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அறம் மற்றும் துணைத் தடுப்பு அமைச்சகத்தின் தலிபான் அதிகாரியான ரியாசுல்லா சீரத் கூறுகையில், ஹெராட்டின் பொதுப் பூங்காக்கள் பாலின ரீதியாகப் பிரிக்கப்பட வேண்டும், ஆண்களும் பெண்களும் தனித்தனி நாட்களில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெண்களை பூங்காக்களுக்குச் செல்லவும், மற்ற நாட்கள் ஓய்வு மற்றும் உடற்பயிற்சிக்காக ஆண்கள் செல்லவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading