தெற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் தொடர்ந்து அதிக வெப்ப அலை வீசி வருவதால், அந்த பிராந்தியத்தில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.
வளி மண்டலத்தில் ஏற்படும் குறைந்த அழுத்த மண்டலத்தைச் சுற்றிலும் காற்று வேகமாகச் சுழல்வதை புயல் என்கிறோம். அதுவே, உயா் அழுத்த மண்டலம் உருவாகி, அதைச் சுற்றிலும் காற்று மெதுவாக சுழல்வது ‘எதிா்ப் புயல்’ என்று கூறப்படுகிறது. புயலின் மையப் பகுதி வேகமாக நகா்ந்து செல்லும். அதேநேரம், அதற்கு எதிரான தன்மை கொண்ட எதிா்ப் புயலின் மையப்புள்ளி மிக மிக மெதுவாக நகரும். சில பகுதிகளில் அது தற்காலிகமாக நிலைத்து கூட நின்றுவிடும். அதுபோன்ற நேரங்களில் காற்றில் ஏற்கெனவே இருக்கும் வெப்பம் இன்னும் அதிகரித்து அந்தப் பகுதிகளில் அதீத வெப்பநிலை ஏற்படும். அதைத்தான் வெப்ப அலை என்கிறோம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காலநிலை மாற்றத்தால் வெப்ப அலைகள் நீண்டதாகவும், அதி தீவிரமானதாகவும், அடிக்கடி உருவாகுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் உலகம் முழுவதும், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில் வெப்ப அலைகள் மிகவும் கடுமையானதாக மாறும் என்று உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ள நிலையில், இந்த நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும் என்றும், அதன் தீவிரமான வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும் என்வும் ஐ.நா. ஏஜென்சியின் மூத்த தீவிர வெப்ப ஆலோசகர் ஜான் நைர்ன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கிரீஸில் தற்போது மிகக் கடுமையான தீ ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள டெர்வெனோகோரியா பகுதியில் உள்ளது. அங்கு செயற்கைக்கோள் படங்களில் புகை மூட்டுவதைக் காணலாம் .கொரிந்து நகருக்கு அருகிலுள்ள கடற்கரை நகரமான லூட்ராகி நகரங்களிலும், தலைநகரின் தெற்கே உள்ள கூவராஸ் நகரங்களிலும் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த வெப்ப அலையின் விளைவாக, தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. அந்த நாட்டின் டொ்வெனோசோரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ தான் மிக மோசமாகப் பரவி வருகிறது. அந்தப் பகுதியிலிருந்து வெளியாகும் புகை செயற்கைக்கோள் படங்களில் தெரியும் அளவுக்கு தீ பரவல் அங்கு தீவிரமாக உள்ளது. காட்டூத் தீயை அணைக்கும் பணிகளில் உதவுவதற்காக, ஐரோப்பிய யூனியன் கிரீஸுக்கு ஹெலிகாப்டா்களை அனுப்பியுள்ளது.
இதற்கிடையே, இத்தாலிய தீவான சாா்டினாவில் வெப்பநிலை 114.8 டிகிரியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் தொடா்ந்து வெப்ப அலை வீசுவதால் நேற்று அங்கு 111.2 டிகிரி வெப்பம் பதிவானதாக கூறப்படுகிறது. ஐரோப்பாவில் அண்மையில் ‘சா்பரஸ்’ என பெயரிடப்பட்ட எதிா்ப் புயல் வீசியது. இதன் காரணமாகத்தான் அங்கு வெப்ப அலை வீசி வருகிறது. இந்த வெப்ப அலைக்கு ‘கேரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக இத்தாலியின் 16 முக்கிய நகரங்களுக்கு அந்த நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடந்த 2003-ஆம் ஆண்டில் வீசிய வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் 70,000 போ் பலியாகினா். அதன்பிறகு அங்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக 62,000 போ் உயிரிழந்தனா். பொதுவாக, அதிக வெப்ப நிலையால் வயோதிகள், உடல்நலக் குறைவு உள்ளவா்கள் போன்றோரின் உயிரிழப்பு அபாயம்தான் அதிகமாக இருக்கும். ஆனால், வெப்ப அலையால் ஆரோக்கியமான மனிதா்கள்கூட இறக்கும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது.
மேலும் இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் மற்றும் பால்கன் போன்ற பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்படும் என்று அங்கு மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலகின் பிற பகுதிகளிலும் அதிக வெப்பம் தாக்கியுள்ளது. மேற்கு மற்றும் தெற்கு அமெரிக்க மாநிலங்களில் 8 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா