காங்கிரஸில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பை படிதார் சமூகத் தலைவர் ஹார்திக் படேல் ராஜிநாமா செய்தார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நான் இன்று தைரியமாக ராஜிநாமா செய்திருக்கிறேன். என்னுடைய முடிவை காங்கிரஸ் கட்சியினரும், குஜராத் மக்களும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். குஜராத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக நான் பணிபுரிவேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஹார்திக் படேல் அனுப்பிய ராஜிநாமா கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
காங்கிரஸை நேரான பாதையில் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், நாட்டின் மற்றும் சமூகத்தின் நலன்களுக்கு எதிராக கட்சி செயல்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக எதையும் எதிர்க்க விடாமல் என்னை கட்சியின் தலைமை தடுத்தது. நாம் 21ஆவது நூற்றாண்டில் இருக்கிறோம். உலகிலேயே நமது நாட்டில் தான் அதிக இளைஞர்கள் உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்புப் பிரிவு 370 ஐ நீக்கியது, ஜிஎஸ்டியை அமல்படுத்தியது அயோத்தியாவில் ராமர் கோயில் என எந்த விவகாரமாக இருந்தாலும் அதற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை மட்டுமே போட்டு வந்தது. குஜராத் மக்களின் பிரச்னைகளையும் கட்சியின் மூத்த தலைவர்கள் பேசவில்லை. கட்சிக்கு தலைமை தேவைப்படும்போதெல்லாம் தலைவர்கள் வெளிநாட்டில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். நான் எப்போதெல்லாம் மாநில இளைஞர்களைச் சந்தித்தாலும் அவர்கள் குஜராத் மக்களை காங்கிரஸ் அவமதிக்கிறது என்றுதான் கூறினார்கள் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் “கை” சின்னத்தையும், தனது பொறுப்பின் பெயரையும் இந்த மாத தொடக்கத்தில் ஹார்திக் படேல் நீக்கினார்.
குஜராத்தில் படிதார் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வலியுறுத்தி இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை ஹார்திக் படேல் முன்னெடுத்தார். குஜராத்தில் பாஜக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. தற்போதைய பிரதமர் மோடியும் குஜராத் முதல்வராக பதவி வகித்தவர் தான்.
இந்த ஆண்டின் இறுதியில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், ஹார்திக் படேல் காங்கிரஸை விட்டு விலகி இருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஹார்திக் படேல் காங்கிரஸில் சேர்ந்தார். 2020 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி குஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.