குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை அணிக்காக 7 ஆண்டுகளாக விளையாடி வந்த ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, கடந்த 2021ம் ஆண்டு குஜராத் அணிக்கு சென்றதோடு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அந்த அணி அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை வென்றதோடு, இரண்டாவது ஆண்டிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தான், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலத்திற்கு முன்பாக, டிரேடிங் அடிப்படையில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு திரும்ப உள்ளதாக வெளியாகின.
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை குஜராத் அணி எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அந்த பதிவில் உங்கள் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள் ஹர்திக் பாண்ட்யா என தெரிவித்திருந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.