குரு பூர்ணிமா; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த பாஜக பிரபலம்

குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு. திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய குஷ்பு, அதன் பின்னர்…

குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.

திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய குஷ்பு, அதன் பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியான பாஜக-வை கடுமையாகத் தாக்கி, ட்விட்டரில் களமாடினார். ஆனால், அவர் சமீபத்தில் பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிலையில், இன்று நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

அண்மைச் செய்தி: ‘தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் குணமடைய ஆளுநர் வாழ்த்து’

“இன்று குருபூர்ணிமா – அன்று, என்னை அரசியலுக்கு அழைத்து வந்து, மனிதாபிமானம், சமத்துவம், அரசியல் கருணை, சுயமரியாதையை விடச் சிறந்தது எதுவுமில்லை என்று சொல்லிக் கொடுத்த ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். #DrKalaignar அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். நன்றி அப்பா” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.