குஜராத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராய்ன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கானது என்.ஐ.ஏவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த மாதம் 18 ஆம் தேதி மத்திய போதை பொருள் புலனாய்வு பிரிவு துறை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 3 ஆயிரம் கிலோ ஹெராய்னை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய மதிப்பு சுமார் 21 ஆயிரம் கோடியாகும். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த போதை பொருள் ஆப்கானிலிருந்து ஈரானுக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து போதைப்பொருள் அனுப்பப்பட்டு இருந்த நிறுவனத்தின் ஜி.எஸ்.டி நம்பரை வைத்து விசாரித்த போது சென்னையை சேர்ந்த தம்பதியான மச்சாவரம் சுதாகர் மற்றும் வைசாலி ஆகியோர் நிறுவனத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தானை சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேரை மத்திய வருவாய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், நிறுவனத்தின் ஜி.எஸ்.டி பெயரை வைத்து சென்னையில் கைது செய்தனர். இது தொடர்பாக பல இடங்களில் சோதனை செய்யப்பட்டது. இதனிடையில் பல நாடுகளை சேர்ந்த கடத்தல் காரர்கள் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளதால் என்.ஐ.ஏவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக