சட்டப்பேரவைத்தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில் இன்று சென்னை கலைவானர் அரங்கில் சட்டப்பேரவை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி கூட்டத்தை தொடங்கினார். அப்போது அவரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சிகள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து பிறகு விவாதிக்கலாம் என்றும் கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதை ஏற்காமல் ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க, காங்கிரஸ், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து ஆளுநர் தொடர்ந்து தனது உரையை சட்டப்பேரவையில் ஆற்றினார்.
அதில் இடம்பெற்றுள்ள சிறப்பங்கள்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கை:
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராடியதற்கு முதல்வர், அமைச்சர்கள், அரசு இயந்திரம் குறிப்பாக, சுகாதாரம், வருவாய், காவல், உள்ளாட்சி அமைப்புகள், மற்றும் ஏனைய துறைகளுடன் முன்கள பணியாளர்கள் இணைந்து ஒரு அணியாக அயராது உழைத்ததை பாராட்டினார். கொரோனா நிவாரணம் மற்றும் மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை 13 ஆயிரத்து 208 கோடி ரூபாய் தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து தமிழ்நாடு அரசு செலவிட்டுள்ளது. பிற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை தாமதப்படுத்தவோ குறைக்கவோ இல்லை. உரிய நேரத்தில் செலவு குறைந்த கடன்களை பெற்று அதன் மூலம் கொரோனா தொற்று நோயின் கடுமையான தாக்கத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களை தமிழ்நாடு அரசு பாதுகாத்து உள்ளது.
மீனவர்கள் நலன்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதன் காரணமாக 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி மத்திய அரசிடம் வலியுறுத்திப்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் காவலில் இருக்கும் மீதமுள்ள 12 மீனவர்களையும் மீட்டெடுக்க அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தொழில் முதலீடு ஈர்ப்பு
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்த்ததில் முதலமைச்சரின் முயற்சிக்கும், ஈடுபாட்டுக்கும் பாராட்டுகள். தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக புதிய தொழில் கொள்கைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது இந்த கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
நதிநீர் பிரச்னை
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை இந்த அரசு தொடர்ந்து பாதுகாக்கும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தப்படும்.
நீர்பாசண திட்டங்கள்
காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பின் பணிகள் விரைவில் தொடங்கப்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அத்திக்கடவு அவிநாசி நீரேற்று பாசன திட்டத்திற்கு 1652 கோடி ரூபாயை அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. இந்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 21ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் முதற்கட்ட பணிகள் நிறைவேற்றப்படும். இதேபோன்று மேட்டூர் அணையின் உபரி நீரை கொண்டு 100 வரண்ட ஏரிகளை நிரப்புவதற்காக சரபங்கா நீரேற்று பாசன திட்ட பணிகள் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருமொழிக் கொள்கை
பள்ளிக்கல்வி மற்றும் உயர்க்கல்விக்கான இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் விளைவுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது.
புனித பயண நிதியுதவி
ஹஜ் மற்றும் ஜெருசேலம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான நிதியுதவியை அரசு உயர்த்தியுள்ளது. மொழிவாரி சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் உரிய சட்டத்தின் மூலம் மாநில சிறுபான்மையினர் ஆணையம் விரிவுபடுத்தப்படும்.