தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டுகின்றன. அதேபோல், நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், வியூகங்களால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (20.1.26) தொடங்கியது. இது 2026 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர். இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு திட்டமிடப்பட்டது. கடந்த 2 வருடங்களாக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றவில்லை. அதனால் இன்று அவர் உரையாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையே, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர், தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கோரிக்கை வைத்து நிலையில், நாங்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தான் மரபு.. தேசிய கீதம் பாட முடியாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார்.







