இந்நிலையில், ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டபின் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது அமைச்சரவைக்கு யார் யாருக்கு என்ன துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு தான் உள்ளது. முதலமைச்சர் எழுதிய கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை தவிர்த்திருக்க வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நிலை சரியில்லை. வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீதிமன்ற காவல் வழக்கு நிலுவையிலிருந்தால் அமைச்சர் பதவியில் இருக்க கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை. தண்டனை பெற்றால் மட்டும் தான் பதவியில் இருக்கக்கூடாது. தொடர்ந்து ஆளுநர் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறார். மதச்சார்பற்ற நாட்டை அவர் மதச்சார்புள்ள நாடாக மாற்ற முயற்சிக்கிறார்.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.







