மாநில அரசின் திட்டங்களாக இருந்தாலும், மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும் கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எல்லாத் துறைகளும் ஒன்றுபோல முன்னேற்றம் காண வேண்டும். சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரின் தேவைகளை அறிந்து திட்டங்கள் தீட்டப்படுகின்றன. திட்டங்கள் தீட்டப்படுவதைவிட, அதன் நோக்கம் சிதையாமல் நிறைவேற்றுவதுதான். அது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
ரூ9,630 கோடி செலவில் ஊரக மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுய உதவிக்குழுக்களுக்கு ரூ 21,000 கோடி வங்கிக்கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். இல்லந்தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உழவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
எந்தத் திட்டமாக இருந்தாலும் அதன் நிறை குறைகளை ஆய்வு செய்ய வேண்டும். கேட்காத கடனும் திரும்ப வராது. போகாத சொந்தமும் திரும்பி வராது என கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல ஆய்வுக்கூட்டம் நடத்தப்படாத எந்த திட்டமும் சிறப்பாக செயல்படாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.