தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இதனையடுத்து, தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு 720 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 80-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.84ஆயிரத்து 400-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 159 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆறாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.








