Gold Rate | தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை நேற்று முன்தினம் (அக்.1) ரூ.87 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.

விலை குறைந்து இருக்கிறதே என நினைத்த மாத்திரத்தில் மாலையில் மீண்டும் அதிகரித்தது. அதன்படி, தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,950-க்கும், ஒரு சவரன் ரூ.87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே, தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.10,840 -க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து  ரூ.86,720 -க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.161-க்கும் கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 61ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.10,900க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து  ரூ.87,200க்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.