“காந்தாரா- 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலை வாரிக் குவித்தது.
இந்நிலையில், காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. “காந்தாரா- 2” இடம்பெறவுள்ள சண்டை காட்சிக்காக ரிஷப் ஷெட்டி பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.







