ஜப்பானில் நடைபெறும் ஜி7 தலைவர்களின் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களை கொண்ட கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்த ஜி7 என்ற அமைப்பை உருவாக்கின. இந்த குழுவில் உள்ள உறுப்பு நாடுகளில் ஒன்றில் ஆண்டுதோறும் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே19 முதல் 21ஆம் தேதி வரை ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 தலைவர்களின் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், மே 24ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறவுள்ள 3வது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் பைடன் பங்கேற்பார் என கூறப்பட்டுள்ளது. குவாட் உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரை அதிபர் பைடன் சந்திப்பார் என வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா