39.1 C
Chennai
May 29, 2024
குற்றம் தமிழகம் செய்திகள்

வழிப்பறி வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் பணிநீக்கம்!

மதுரை வழிப்பறி வழக்கில் பெண் காவல் ஆய்வாளரை, மதுரை சரக டிஐஜி பொன்னி பணி நீக்கம் செய்து உத்தரவுயிட்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடம் , நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணி புரிந்த பெண் காவல் ஆய்வாளர் வசந்தி என்பவர், 5 கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ 10 லட்சம் பணம் பறித்ததாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னாள் ஆய்வாளர் வசந்தி நிபந்தனை ஜாமினில் வெளியில் உள்ளார். இந்நிலையில், ஆய்வாளர் வசந்தி வழக்கில் தொடர்புடையை ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சாட்சி ஒருவரை மிரட்டியதாக புகார் எழுந்தது. இதனால், போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே வசந்தி கடந்த மாதம் 31ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே வந்த போது, அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஜாமினில் உள்ள நிலையில் வழக்கின் சாட்சியை மிரட்டி தொடர்ந்து சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் , பெண் காவல் ஆய்வாளர் வசந்தியை
பணிநீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி பொன்னி உத்தரவிட்டுள்ளார்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading