கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதியுடன் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 59,486 கோடி டாலராக சரிந்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆக. 25-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3 கோடி டாலர்கள் சரிந்து 59,485.8 கோடி டாலராக உள்ளது. கடந்த மாதம் 18-ம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 727.3 கோடி டாலர்கள் சரிந்து 59,488.8 கோடி டாலராக இருந்தது. அக்டோபர் 2021-ம் ஆண்டு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலரை எட்டியது.
உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசர்வ் வங்கி பயன்படுத்துவதால் அது குறைந்து வந்தது. கடந்த மாதம் 25-ம் தேதியுடன் அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 53.8 கோடி டாலர் குறைந்து 52,249.9 கோடி டாலராக உள்ளது.டாலர் அல்லாத யூரோ, பவுண்ட், யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் டாலர் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும். மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 53 கோடி டாலர் அதிகரித்து 4,435.4 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆர்) 1.1 கோடி டாலர் குறைந்து 1,819.4 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 1.2 கோடி டாலர் குறைந்து 50.61 கோடி டாலராக உள்ளது”
இவ்வாறு ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.