முக்கியச் செய்திகள் உலகம்

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று அடக்கம்

மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

கால்பந்து உலகின் ஜாம்பவானும், உலகக் கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரரான பிரேசிலின் பீலே (வயது 82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மருத்துவமனையில் உள்ள பீலேவின் உடல் இன்று காலை அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பீலேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதியில் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இங்கு நடக்கும் இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கால்பந்து நாயகன் பீலேவின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; வங்கி மேலாளர்களுக்கு டிஜிபி அறிவுரை

Web Editor

நிஜ பார்பியாக மாற ஆசை – ரூ.82 லட்சம் செலவு செய்து சிகிச்சை மேற்கொண்ட ஆஸ்திரேலிய பெண்!!

Jeni

புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதால் மாணவி உயிரிழப்பு

Jeba Arul Robinson