முக்கியச் செய்திகள் தமிழகம்

ஷவர்மா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் அறிவுரை

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஷவர்மா போன்ற உணவுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

கேரள மாநிலத்தில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ஷவர்மா விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். ஷவர்மா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் ஷவர்மா உள்ளிட்ட உணவுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மேலைநாட்டு உணவு வகையான ஷவர்மா அந்த நாட்டின் மக்களின் தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும் என தெரிவித்த அவர், பொதுமக்கள் ஷவர்மா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 

தமிழ்நாட்டில் ஷவர்மா கடைகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறிவுரை வழங்கி, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், கேரளாவில் ஷவர்மாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஷவர்மா கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

ஏற்காடு அரசு மருத்துவமனையில் 1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பிரேத பரிசோதனை கூடம் கட்டப்படும். ஏற்காட்டில் கடந்த 8 வருடமாக பிரேத பரிசோதனை கூடம் செயல்படவில்லை என்பது கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறை அலட்சியத்திற்கு ஒரு முன் உதாரணம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram