எவர்கிரீன் ரஜினிகாந்தின் ஸ்க்ரீமர் தான் ஜெயிலர், தலைவர் அலப்பறை என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 900 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 4000 திற்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு ஷிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.
Jailer. A screamer from the evergreen @rajinikanth #ThalaivarAlaparai #ThalaivarNirandharam 🤩🤩🤩
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 13, 2023
தொடர்ந்து ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் பெரிய அளவிலான பாராட்டுகள் சமூக வலைதலங்களில் கிடைத்து வருகிறது. இந்த சூழலில் ஜெயிலர் படம் குறித்து அஸ்வின் ட்வீட் செய்துள்ளார். “எவர்கிரீன் ரஜினிகாந்தின் ஸ்க்ரீமர் தான் ஜெயிலர்” என ட்வீட் செய்துள்ளார். இதனுடன் தலைவர் அலப்பறை, தலைவர் நிரந்தரம் என ஹாஷ்டேகையும் பதிவிட்டுள்ளார். இது படத்துக்கு அவர் கொடுத்துள்ள ரிவ்யூ போல அமைந்துள்ளது.







