காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுமழை தொடரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் 12வது நாளாக தொடர்கிறது. காஸா மீது முப்படை தாக்குதலுக்கு தயாராகியுள்ள இஸ்ரேல் ராணுவம், தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது.
இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் போர் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அப்போது ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்பதை பைடன் எடுத்துரைப்பார் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் தெரிவித்துள்ளார்.







