28.9 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘EPF; மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை’ – மத்திய இணை அமைச்சர்

பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்யும் திட்டம் உள்ளதா? என நாடாளுமன்றத்தில் வைகோ எழுப்பிய கேள்விக்குத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய வைகோ, 2021-22 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.1 சதவிகிதமாக அரசு ஒப்புதல் அளித்துள்ளதா?, அப்படியானால், 40 ஆண்டுகளில் மிகக் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?, ஓய்வூதியத்திற்கான நிதியைச் சேமிப்பதற்கான ஒரே வழி வருங்கால வைப்பு நிதி மட்டுமே என்பதால், தொழிலாளர் வர்க்கத்தால் ஏதேனும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதா?, அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து அரசு மறுபரிசீலனை செய்யுமா?, இல்லையெனில், அதற்கான காரணங்கள் என்ன? எனக் கேட்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்குப் பதிலளித்துள்ள, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி, பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், 1952 இன் பாரா 60(1) விதிகளின்படி, பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒவ்வொரு பணியாளரின் கணக்கில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தில் வரவு வைக்கப்படும் எனவும், மத்திய வைப்பு நிதி காப்புக் குழு (CBT), பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) யுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘கள்ளக்குறிச்சி கலவரம்; கைது நடவடிக்கை தீவிரம்’

மேலும், வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் அதன் முதலீடுகளிலிருந்து பெறும் வருமானத்தைப் பொறுத்தது எனத் தெரிவித்துள்ள அவர், வருங்கால வைப்பு நிதித் திட்டம், 1952 இன் படி மட்டுமே அத்தகைய வருமானங்கள் விநியோகிக்கப்படுகின்றதாகவும், மத்திய வைப்பு நிதி காப்புக் குழு, பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியத்தில் 8.10 சதவீத வட்டி விகிதத்தை 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கு, பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, பொது வருங்கால வைப்பு நிதி 7.10%, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 7.40%, சுகன்யா சம்ரித்தி நிதித் திட்டம் 7.60% போன்ற திட்டங்களை ஒப்பிடும்போது, பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அதிகம் எனத் தெரிவித்துள்ள அவர், 2021-2022 ஆம் நிதி ஆண்டிற்கான பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தை 8.10% மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading