லக்னோ வீரர்களுக்கான டக்அவுட், மைதானத்தின் அருகே குடைகளை மட்டுமே வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 182 ரன் குவித்தது.
83 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது. பிரேரக் மன்கட் நிகோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தால், லக்னோ அணி 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 13 புள்ளிகளுடன் மீண்டும் 4வது இடத்துக்கு முன்னேறியது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது, லக்னோ வீரர்களுக்கான டக்அவுட், மைதானத்தின் அருகே குடைகளை மட்டுமே வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திடம், முறையான டக்அவுட் களை வீரர்களுக்கு வழங்க வேண்டும். கடற்கரையில் பயன்படுத்தும் குடைகளை வீரர்களுக்கான டக்அவுட்களில் கொடுப்பது பாதுகாப்பற்றது எனவும் தனது கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.







