தடம் புரண்ட டபுள் டக்கர் ரயில் : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள் டெக்கர் ரயில் தண்டவாளத்தில் இருந்து  தடம் புரண்டது.  மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இன்று காலை 7.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து…

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள் டெக்கர் ரயில் தண்டவாளத்தில் இருந்து  தடம் புரண்டது.  மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இன்று காலை 7.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்திற்கு டபுள் டெக்கர் ரயில்(22625) தினசரி ரயிலாக சென்று வருகிறது.

இந்த நிலையில் இன்று வழக்கம்போல் டபுள் டக்கர் ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டு குப்பம் ரயில் நிலையத்தை கடந்து  காலை சரியாக 11.15 மணியளவில் பங்காருபேட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பிரேக் பெட்டிக்கு அருகே இருந்த C1 ஏசி பெட்டி தடம் புரண்டுள்ளது  ரயிலின் பெட்டி புரண்டது. இதனைத்  தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கபட்டது. இதனையடுத்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.   ரயில் தடம்புரண்டதால்  இந்த வழித் தடத்தில் செல்லும் ரயில்கள் தாமதமாகவே சென்றன.

பயணிகள் ரயிலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு உணவு , மாற்றும் பயணம் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாகவும், நிலைமையை இயல்புக்கு கொண்டு வர துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.