பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பதால் ஆண்கள் பிடிக்காது என்று நினைத்து கொள்ள வேண்டாம் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.
பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவர் மீனா சாப்ரியா எழுதிய UNSTOPPABLE என்ற வாழ்க்கை சுயசரிதையை புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், மைக் செட் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திரைதுறையில் அறிமுக காலத்தில் உங்களால் சில கதாபாத்திரங்கள் எல்லாம் ஏற்று நடிக்கவே முடியாது. அப்படியிருக்கும் போது நீங்க எல்லாம் எதுக்கு சினிமாக்கு நடிக்க வரிங்க.என்று பலர் கேட்டதாக வேதனை தெரிவித்த அவர், நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிகம் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என யாரும் நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதியா என்று கூட சிலர் கேட்டார்கள். அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் பெண்களிலும் தவறானவர்கள் உள்ளதாக அவர் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா