“அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்” – ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகை #Andrea பதில்!

“அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்” என ஹேமா கமிஷன் குறித்து நடிகை ஆண்ட்ரியா பதிலளித்துள்ளார். நேற்று சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை கடை திறப்பு விழா நடைபெற்றது. நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா…

“அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்” என ஹேமா கமிஷன் குறித்து நடிகை ஆண்ட்ரியா பதிலளித்துள்ளார்.

நேற்று சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை கடை திறப்பு விழா நடைபெற்றது. நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார்.

கடையைத் திறந்து வைத்து ஆண்ட்ரியா பேசும்போது, “நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன்.இதை வடிவமைத்திருப்பது ஒரு ஆண் என்பதில் மகிழ்ச்சி. இது பெண்களுக்கானது மட்டுமல்ல அனைவருக்குமானது.ஆண்கள் தங்கள் உறவினர்களுக்கு, பெண் நண்பர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம்.” என்றார்.

அப்போது ஆண்ட்ரியாவிடம் ஹேமா கமிஷன் அறிக்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது

அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, “அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்” என்று தவித்து விட்டார். நோ கமெண்ட்ஸ் என்பது அவரது பதிலாக இருந்தது குறித்து நிருபர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.எப்போதும் தைரியமாக கருத்துக்களை வெளியிடும் ஆண்ட்ரியா இப்படிக் கூறியது நிருபர்களுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.