மதுரையில் கடந்த ஓராண்டில் திமுக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் காலோனிடம் மனு அளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்தியில் அதிகாரம் குவிந்து கிடப்பதாக சொல்லும் திமுக அரசு, சுயாட்சி கோரும் திமுக அரசு உள்ளாட்சி பிரிதிநிதிகளுக்கெ இடம் அளிப்பதில்லை. மதுரை மாநகராட்சியில் உள்ளாட்சி பிரிதிநிதிகளுக்கே இடம்கொடுத்தது தான் திராவிட மாடல் அரசா?
மதுரையில் ஓராண்டில் திமுக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மதுரையில் புதிய திட்டத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. கலைஞர் நூலகம் தவிர எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுக தற்போது திறந்து வைத்து வருகிறார்கள்.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் தொற்று நோய்கள் பரவுகிறது. மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப பாதாள சாக்கடை பணிகள் நடைபெறவில்லை. மதுரை மாநகராட்சி வரி வருவாயை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அம்ருத் குடிநீர் திட்டத்தால் குடிநீர் தட்டுப்பாடு வராது என்றார் செல்லூர் ராஜூ.