திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட இரண்டு அரசுமே செய்தி அரசியலாக தான் உள்ளது செயல் அரசாக இல்லை என திருச்சியில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டினார்.
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்ற பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது. தண்ணீருக்காக அடுத்த மாநிலங்களில் கையேந்தும் நிலை இருக்கின்ற வரை இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அத்துடன், வணிகர்களுக்கு மின் கட்டண உயர்வு என்பது மிகப்பெரும் பாதிப்பை
ஏற்படுத்தும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும். இதன் மூலம்
வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுத்தும். கர்நாடகாவில் இலவச அரிசி வழங்கப் போவதாக அறிவித்த நிலையில் அதனை தமிழ்நாட்டில் அதிக அளவு கொள்முதல் செய்ய உள்ளனர். இதனால் தமிழகத்தில் அரிசி
தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். இது மாறி மாறி தான் நடைபெறும். பொங்கலுக்கு இலவசமாக பொருட்கள் வழங்குவதற்காகக் குஜராத்தில் கொள்முதல் செய்து வழங்கினர். அப்போது அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டது போன்ற சூழல் தான் தமிழகத்திலும் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும், அமித்ஷா குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், அதானியை வளர்த்து விட்டதை தவிர இவர்கள் வேறு என்ன சாதனை செய்தார்கள். எல்லா அரசு சொத்துக்களையும் தனியாருக்குத் தாரை வார்த்து கொடுத்ததை தவிர வேறு என்ன செய்தார்கள்.எந்தத் துறையிலும் ஒரு வளர்ச்சியும் இல்லை என விமர்சித்தார்.
அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்விக்கு, அவருடைய ஆட்சி அவர்கள் என்ன வேணாலும் செய்வார்கள் கலைஞர் கருணாநிதி இருக்கும்போதே ஸ்டாலினை ஆக்கினார்கள். அதே போன்று ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருக்கும்போது இவரை துணை முதல்வராக ஆக்கி விடுவார்கள்.
திமுக மற்றும் பாஜகவிடம் மக்களுக்கான சேவை அரசியல் கிடையாது, செயல் அரசியலும் கிடையாது செய்தி அரசியல் மட்டுமே செய்கிறார்கள். அவர்களுக்கு அவர்களே விளம்பரம் செய்து கொள்கிறார்கள். அதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள்.
செப்டம்பரில் மகளிர் உரிமை தொகை கொடுக்க உள்ள நிலையில் அதனை தற்போ தையிலிருந்தே விளம்பரம் செய்து வருகிறார்கள்.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பட்டம் வழங்காமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது ஆனால், ஆளுநர் இதையெல்லாம் எங்கு கவனிக்க போகிறார். அவருக்கு இது இல்லை வேலை. ஆளுநர் ஐபிஎஸ் எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது எனவும் திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் கூறினார்.