முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

துபாய் ATP டென்னிஸ் தொடர் காலிறுதி சுற்றில் ஜோகோவிச்!

துபாயில் நடந்து வரும் ஏடிபி டென்னிஸ் தொடர் காலிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி பிப்ரிவரி 28ம் தேதி தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், தகுதி நிலை வீரர் தாமஸ் மசாக்கை (செக் குடியரசு) எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை காட்டிய தாமஸ் மசாக் இரண்டாவது செட்டை  6-3 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஜோகோவிச் போராடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். இறுதியில், ஜோகோவிச் 6-3, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.தொடர்ந்து, ஏடிபி டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், நெதர்லாந்து வீரர் கிரிக்ஸ்பூர் உடன் மோதினார். அதிரடியாக விளையாடிய ஜோகோவிச், அடுத்தடுத்து இரண்டு செட்டுகளையும் 6-2, 6-3 என கைப்பற்றி 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உயிரிழப்பு எண்ணம் வருகிறதா? அப்போ இந்த படத்தை பாருங்க..

Halley Karthik

நாகை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

Jeba Arul Robinson

பட விழாவில் காதலை சொன்ன ’வலிமை’ வில்லன்

Halley Karthik