2015-2016-ம் ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொலைதூர கல்வி என்றால் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது அண்ணாமலை பல்கலைக்கழகம்தான். நேரடியாக கல்லூரிகளில் வந்து பயில முடியாத ஆயிரக்கணக்கானோர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் வாயிலாக தொலைதூர கல்வி பயின்று வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், உரிய அனுமதி பெறாமல் தொலைதூர மற்றும் திறந்தநிலைக் கல்வி மூலம் படிப்புகளை வழங்கியதால், அந்த படிப்புகள் மூலம் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தங்களிடம் அனுமதி பெறாமல் 2015-2016-ம் ஆண்டு முதல், அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர மற்றும் திறந்தநிலைக்கல்வி படிப்புகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடுமையான விதிமீறல் என்பதால், மாணவர்கள் யாரும் இனி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி படிப்பிலோ, திறந்தநிலை படிப்பிலோ சேர வேண்டாம் எனவும் பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது.