ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் மூன்றாவது முறையாக முதலில் வெளியேறும் அணி என்ற பெயர் பெற்றது டெல்லி கேபிடல்ஸ்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற 59-வது லீக் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக ஆடி 103 ரன்கள் குவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கேப்டன் டேவிட் வார்னர் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால், டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
இதனால், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி, பிளே ஆப் வாய்ப்பை நழுவ விட்டது டெல்லி கேபிடல்ஸ் அணி. இதன்மூலம் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் மூன்றாவது முறையாக முதலில் வெளியேறும் அணி என்ற பெயர் பெற்றது டெல்லி கேபிடல்ஸ்.