அரசியல் வட்டாரங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும், இளைஞர்களும் சமூகவலைதளங்கள் வாயிலாக, மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான சங்கரய்யாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுதந்திரப் போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13-ந் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் காலமானார். சங்கரய்யாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. சங்கரய்யாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் வட்டாரங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும், இளைஞர்களும் சமூகவலைத்தளங்கள் மூலமாக மறைந்த என்.சங்கரய்யாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முகநூல், எக்ஸ் போன்ற தளங்களில் உள்ள பயனர்கள், மறைந்த தலைவர் சங்கரய்யாவின் படத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், சங்கரய்யா, Sankaraiah, FreedomFighter உள்ளிட்ட ஹேஸ்டேக்கள் ட்ரெண்டாகி வருகின்றன.