இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெறமாட்டார்.
நியூசிலாந்து உடன் இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெறமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களிடம் கூறும் போது, முக்கிய வீரரான ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக ஆடமுடியாமல் போனதால் முந்தைய 4 ஆட்டங்களை போல் அணியின் வரிசை இருக்காது எனக்கூறினார்..ஹர்திக் பாண்ட்யா இடத்துக்கு யாரை கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசித்து ஆடுகள சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி முடிவு செய்வோம்’ என்றும் அவர் கூறினார்.







