மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.நன்மாறன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2 முறை சட்ட மன்ற உறுப்பினராக பதவி வகித்தவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.நன்மாறன் உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.







