கொரோனா தொற்று தற்போது குறையத் தொடங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அவசர ஆக்சிஜன் படுக்கை வசதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கொரோனா, ஒமிக்ரான், டெல்டா வைரஸ்களை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கிற்கு மக்கள் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் தொற்று அதிகமாகி வருகிறது, தமிழகத்தில் குறைந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர், மாவட்டங்களில் தொற்று குறைந்து உள்ளது என்றார்.
12,134 நபர்கள் மருத்துவமனையில் படுக்கை வசதிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9% பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற ராதாகிருஷ்ணன், 3 ஆம் அலை பாதிப்பு அதிகமாக தற்போது இறங்க தொடங்கி உள்ளது என்றார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சில இடங்களில் மட்டும்தான் தொற்று குறைந்துள்ளது.
தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக குறைய வேண்டும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை உயர்ந்து குறையத் தொடங்கியுள்ளது. இது மற்ற மாவட்டங்களிலும் குறைய வேண்டும். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.