மன்னர் மூன்றாம் சார்லஸ் எந்த அரண்மனையில் தங்குவார் என்பதில் இன்னும் குழப்பம் நீடிப்பதாக தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் நீண்டகாலம் மகாராணியாக இருந்த, ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி, தனது 96வது வயதில் மரணமடைந்தார். இதனையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அறிவிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸுக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா வெஸ்ட்மினிஸ்டர் அபே பகுதியில் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விழாவில், பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல் ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னரின் அரியணையில் அமர்ந்தார். இதன் பின்னர் இங்கிலாந்து ராணியாக கமிலா பார்க்கர் அறிவிக்கப்பட்டார். இவ்விழாவில் இளவரசர் வில்லியம்ஸ், அவரது மனைவி கேட், இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மீகன் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் மூன்றாம் சார்லஸ் எந்த அரண்மனையில் தங்குவது என்பதில் இன்னும் குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இருவரும் குளோசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஹைக்ரோவ் அரண்மையில் வசித்து வருகின்றனர். மன்னர் பக்கிங்ஹாம் அரண்மனையைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று அரச குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பால்மோரல் கோட்டை 1852 முதல் இங்கிலாந்து அரச குடும்பம் வசிக்கும் இடமாக இருந்து வருகிறது. ஆனால் சிறிய அரண்மனையில் வாழ்வதை மன்னர் சார்லஸ் விரும்புகிறார் என்றும், 52 அறைகள் கொண்ட பால்மோரல் கோட்டையுடன் ஒப்பிடும் போது, எட்டு படுக்கையறைகள் கொண்ட மன்னர் பிர்கால் அரண்மனையிலே மன்னர் தங்க விரும்புவார் என்றும் அரச நிபுணர்கள் கூறுகின்றனர்.