கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து; சினிமா பாணியில் குற்றவாளியை துரத்தி பிடித்த போலீசார்!!!

சென்னை நந்தம்பாக்கத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய குற்றவாளியை சினிமா பாணியில் துரத்தி சென்று போலீசார் பிடித்துள்ளனர்.  சென்னை பரங்கிமலை ஏழு கிணறு பகுதியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி அடையாறு பேட்ரிசியன்…

சென்னை நந்தம்பாக்கத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய குற்றவாளியை சினிமா பாணியில் துரத்தி சென்று போலீசார் பிடித்துள்ளனர். 

சென்னை பரங்கிமலை ஏழு கிணறு பகுதியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி அடையாறு பேட்ரிசியன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவியையை பரங்கிமலை கலைஞர் நகரை சேர்ந்த நவீன் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக மாணவி நவீன் உடன் பேசுவதை தவிர்த்து இருந்து உள்ளார்.

இந்த நிலையில் மாணவி இன்று வழக்கம்போல் அடையாறில் உள்ள கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மாணவி பரங்கிமலை ஏழு இரண்டாவது தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த நவீன் அவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.பின்  திடீரென நவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து மாணவியின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இரையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து நவீன் செல்போன் என்னை வைத்து டிரேசர் செய்த போலீசார் நவீன் அதே பகுதியில் சுற்றிந்தது தெரியவந்தது.

இதைடுத்து போலீசார் போலீஸ் தேடுவதை அறிந்து கொண்ட நவீன் போலீசாரை கண்டு தப்பி ஓடி உள்ளார். சினிமா பானியில் போலீசார் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். அப்போது நவீன் கீழே விழுந்ததில் மயக்கம் அடைந்தார் உடனே போலீசார் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தபோதே மாணவியை கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.