மேற்கு வங்கம் கொல்கத்தாவில் காந்திமுர்த்தியிலிருந்து ஹஸ்ரா பகுதி வரை அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி பேரணியை தொடங்கியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இம்மாத இறுதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், திரிணாமூல் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சுவெந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் அவரின் சவாலை ஏற்று அதே தொகுதியில் மமதாவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக கடந்த புதன் கிழமை வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு தாக்குதலில் மமதாவின் கால்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், நான் சக்கர நாற்காலியில் அமர்ந்தே பிரச்சாரம் மேற்கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது கொல்கத்தாவில் காந்திமுர்த்தியிலிருந்து ஹஸ்ரா பகுதி வரை மமதா பானர்ஜி பேரணியை தொடங்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.