தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் செல்லவுள்ளார்.
துபாயில் எக்ஸ்போ தொழிற் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. மத்திய அரசு சார்பில் அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. கண்காட்சியில் கலந்து கொண்டு புதிய முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் செல்ல உள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தூபாயில் நடைபெறும் உலகக் கண்காட்சியில், நாளை தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களுடனும், முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.