சென்னை மடிப்பாக்கத்தில் சாலை, மழைநீர் கால்வாய் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகள் மழைக்காலங்களில் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் கால்வாய் பணிகள் நடப்பதால் மிகுந்த பாதிக்கப்பட்டு உள்ளன. மழைநீர், பாதாள சாக்கடை, குடிநீர் பணிகள் முடிந்த பகுதிகளில் உடனடியாக சாலைகள் போடும் பணிகள் நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மடிப்பாக்கம் ராம் நகரில் 7வது தெருவில் ரூ.42 லட்சம் செலவில் 510 மீட்டர் தூரம் மற்றும் 3வது தெருவில் ரூ. 20 லட்சம் செலவில் 610 மீட்டர் தூரம் தார் சாலைகள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது சாலை அமைக்கும் பணிகள் விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.அப்போது அந்த பகுதியை சேர்ந்த மாலா என்ற பெண் மழைக்காலங்களில் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். சாலைகள், மழைநீர் கால்வாய் பணிகளை விரைவாக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவரது கேள்விக்கு விரைவாக பணிகள் செய்யப்படும் என முதலமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்வின்போது, அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.