அனைத்து சூழலிலும் வெற்றி பெற விரும்பும் இந்தியாவின் அடையாளமாக சந்திரயான்-3 திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
104ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் இறங்கி மூன்று நாட்களுக்கு மேலாகியும் அதன் வெற்றி கொண்டாட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து சூழலிலும் வெற்றி பெற விரும்பும் இந்தியாவின் அடையாளமாக சந்திரயான் – 3 திட்டம் மாறியுள்ளது என்றும், எந்த சூழ்நிலையிலும் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை நாம் அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சந்திரயான்-3 திட்டத்தில் பல பெண் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக பிரதமர் கூறினார். மேலும், செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தயாராகி வருவதாக கூறிய அவர், இந்தியாவின் திறனை உலக நாடுகள் காணப்போகிறது என குறிப்பிட்டார்.







