சந்திரயான் 2 ஆர்பிட்டர் – சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இடையே தகவல் தொடர்பு வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக் கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டா் கலன் கடந்த 17ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சந்திரயான் 2 ஆர்பிட்டர் – சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இடையே தகவல் தொடர்பு வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ‘Welcome, buddy!’ என விக்ரம் லேண்டரை சந்திரயான் 2 ஆர்பிட்டர் வரவேற்றதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 2 தோல்வியை தழுவியபோதும் அதிலிருந்த சந்திரயா 2 ஆர்பிட்டருடன் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை ஏற்படுத்தியிருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.







