14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 4 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிமேல் ஒரு வளிமண்டல ழேடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்…

Chennai Meteorological Department ,heavy rain , Tamil Nadu

தமிழ்நாட்டில் 4 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிமேல் ஒரு வளிமண்டல ழேடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,  மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர்,  மதுரை, திருநெல்வேல், தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.