செல்போன் டவர் அமைக்க நிலம் கொடுத்தால் 80 லட்சம் ரூபாய் முன் பணம், 45 ஆயிரம்
ரூபாய் வாடகை, வேலைவாய்ப்பு என கூறி ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ஆசை காட்டி 14 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் ஏமாற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற
ஆசிரியரிடம் ரூ.14 லட்சத்து 26ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகள் இது குறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை தாலுகா குந்துகோட்டை பகுதியை
சேர்ந்தவர் நாகபூஷன். வயது 70. ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். கடந்த ஜூன் 23
அன்று இவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.
அதில் தனியார் செல்போன் டவர் (ஏர்டெல்) அமைக்க இடம் கொடுத்தால் ரூ 80 லட்சம்
அட்வான்ஸ் ஆக கொடுக்கப்படும் மாதந்தோறும் ரூ.45 ஆயிரம் வாடகை தொகை
கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு நாகபூஷன் பேசினார். அப்போது மும்பை அலுவலகத்திலிருந்து பேசுகிறேன் என தெரிவித்து அவர்கள் செல்போன் டவர் அமைப்பதற்காக சில நடைமுறைகள் உள்ளது என தெரிவித்துள்ளனர். இதற்கு சொத்து யார் பெயரில் உள்ளது அவருடைய ஆதார் கார்டு பான் கார்டு வங்கி கணக்கு ஆகியவை தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு ஆசிரியரும் அவருடைய மனைவி பார்வதி பெயரில் உள்ள சிட்டா நகல் மற்றும் ஆவணங்களையும் அனுப்பி உள்ளார்.

இதையடுத்து மற்றொருவர் தொடர்பு கொண்டு உங்களுக்கு டவர் அமைப்பதற்கு ஆர்டர்
ஆகியுள்ளது என தெரிவித்து ரூபாய் 12,000 செலவாகிறது. ஆனால் அதற்கு நீங்கள் 6,000
மட்டும் அனுப்பினால் போதும் என தெரிவித்துள்ளார். இதை நம்பி அவரும் முதல்
தவணையாக ரூபாய் 6 ஆயிரம் அனுப்பி உள்ளார்.
இதேபோல அடுத்தடுத்து வெவ்வேறு செல் நெம்பர்களில் இருந்து மர்ம ஆசாமிகள்
தொடர்பு கொண்டு தங்களுக்கு மெட்டீரியல் தயாராக உள்ளது. இதை நாங்கள் மூன்று
லாரிகளில் எடுத்து வருகிறோம். இதற்கு உண்டான செலவு தொகையை மற்றும் விமானத்தில் வருவதற்கு உடனடியாக ரூ 2 லட்சத்து 80 ஆயிரம் வங்கியில் செலுத்துமாறு
தெரிவித்துள்ளனர்.
இதேபோல் அவர்கள் கூறியபடி 3 வங்கிகளின் கணக்கிற்கு பல தவணைகளாக பணம் அனுப்பி உள்ளார். மேலும் போன் பே மூலம் பணம் செலுத்தி உள்ளார். கடந்த நான்கு மாதங்களாக ரூ.14 லட்சத்து 26 ஆயிரத்தை நாகபூஷன் அனுப்பி உள்ளார்.

தொடர்ந்து சீனிவாசன், பாண்டியன் பேசுகிறேன், விஜயகுமார் வங்கியில் இருந்து
பேசுகிறேன் என்று இவ்வாறு மாற்றி மாற்றி பேசி ஆசிரியரை தன் வலையதுக்குள் சிக்குவைத்த மர்ம சாமிகள் லட்சக்கணக்கில் ஆட்டையை போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியர் செய்வதறியாமல் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சைபர் கிரைமில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப் பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகிறார். குறுந்தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என செய்தித்தாள்கள் மற்றும் டிவிகளில் விளம்பரம் வந்தால் கூட படித்தவர்களே இது போல் ஏமாற்றம் அடைந்துள்ளது லட்சக்கணக்கில் பணம் கிடைக்கிறதே என்ற பேராசை தான் காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.







