காவிரியில் தண்ணீர் திறந்த விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், திறக்க அழுத்தம் தராமல் இருந்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும் திருச்சியில் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக டெல்டா மாவட்டங்களில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளின்படி தமிழகத்துக்குச் சேர வேண்டிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியகத்தின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. போராட்டத்துக்கு திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக , காவிரியில் தண்ணீர் திறந்த விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், திறக்க அழுத்தம் தராமல் இருந்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும் திருச்சியில் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி தலைமை தபால்நிலையம் அருகே நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் விவசாய சங்கத்தினர், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.