முக்கியச் செய்திகள் உலகம்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!

தடையை மீறி பூங்கா பகுதியில் நாயை அழைத்துச் சென்றதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்குச் சென்றுள்ளார். அப்போது, தனது வளர்ப்பு நாயையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பூங்கா பகுதியில் நாயை அழைத்து வரக் கூடாது என்றும், நாயை முறையாக வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அதை மீறி ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை பூங்காவில் விட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்க: ’நாட்டு… நாட்டு..’ பாடலை வீணையில் வாசித்து அசத்திய பெண் – வைரல் வீடியோ

அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர் பூங்காவில் நாய்களை வழிநடத்துவதற்கான வழிமுறைகளை  நினைவுபடுத்தியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நாய் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டது.  இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஏற்கனவே ரிஷி சுனக் கொரோனா கட்டுப்பாட்டை மீறி விருந்தில் பங்கேற்றது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது போன்ற சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இரண்டு புதிய படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லைகா நிறுவனத்துடன் ஒப்பந்தம்

EZHILARASAN D

திருச்செங்கோடு அருகே சாலை விபத்து, புதுமணப்பெண் உட்பட 3 பேர் பலி

Web Editor

யூரோ கோப்பை: டென்மார்க், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி

Vandhana