செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் ரூபாய் 386 செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை ஆர்.ஏ. புரத்தில் 35 வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இன்று தொடர்ச்சியாக 35 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் தடுப்பூசி போடும் பணியில் பல சுணக்கங்கள் இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை 18 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போடுவதற்கான எண்ணிக்கை 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரமாக உள்ள நிலையில், இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 96.26%, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 90.15% மற்றும் 12 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன் அவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதில் 6 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுகொண்டு உள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் 386 ரூபாய் 25 காசுகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வந்தது பொதுமக்கள் யாரும் பணம் கட்டி தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வர வில்லை என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை பூஸ்டர் தடுப்பூசி தமிழக அரசு சார்பாக போடப்பட்டது. ஆனால், செப்டம்பர் 30க்கு மேல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றால் 386 ரூபாய் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.