31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ஆட்குறைப்பில் அதிரடி காட்டும் பெருநிறுவனங்கள்: 2,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக போயிங் அறிவிப்பு

விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்  இந்த ஆண்டில்  2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் ஒரு பகுதியாக, அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை அண்மையில் அறிவித்தன. அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடன் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நிறுவனத்தில் 5% சதவீத ஊழியர்களை அதாவது 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் 12,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது.  ஸ்பாடிபை நிறுவனமும் 600 ஊழியர்களையும் ஜூம் நிறுவனமும் 1300 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.

தற்போது ஏரோஸ்பேஸ் நிறுவனமான போயிங் 2000 ஊழியர்களை இந்த ஆண்டில் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “நிதிப்பிரிவு மற்றும் மனிதவள மேம்பாட்டு பிரிவுகளில் 2000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டின் படி 15000 ஊழியர்கள் போயிங் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.” என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading