தமிழ்நாட்டில் இன்று முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில்களில் பொதுமக்கள் வழிபடுவதற்கு திறக்கப்படும் என்கிற அறிவிப்பை பாஜக ஆத்மார்த்தமாக வரவேற்பதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “திருக்கோயில்களில் காலையில் வழிபட்டு வியாபாரத்தைத் தொடங்கும் வணிகப் பெருமக்களுக்கும், தினமும் வழிபடும் வழக்கமுடைய மூத்த குடிமக்களுக்கும் தினப்படி வாழ்க்கையில் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த திருக்கோயில்களை எல்லா நாட்களிலும் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த அக்.7ம் தேதி பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் மக்களோடு இணைந்து வாரத்தின் எல்லா நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக பெருவாரியான போராட்டங்களை நடத்தினர்.
சென்னை மண்ணடியில் தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில் நானும் போராட்டம் நடத்தி பேசுகையில் இன்னும் 10 நாட்களில் கோயில்களை எல்லா நாட்களிலும் கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
திருவிழா நாட்களிலெல்லாம் திருக்கோயில்களை மூடி இருக்காமல், மக்களுக்கான எங்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, கோயில்களை திறக்கும் முடிவெடுத்த தமிழக அரசை பாராட்டி வரவேற்கிறோம்.
மக்களின் உண்மையான எண்ணங்களை பிரதிபலிக்கும் எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இந்த நவராத்திரி எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு பாஜக சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.