உத்தரப்பிரதேசத்தில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சி ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணியை பாஜக உறுதி செய்துள்ளது.
உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் பிப்ரவரி மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன. கொரோனா அச்சுறுத்தல் தேர்தல் ஆணையம் வரும் 22ம் தேதி வரை தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் மூலம் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தின் மொத்தமுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சி ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணியை பாஜக உறுதி செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அக்கட்சியின் தேசிய தலைவர் JP நட்டா இதனைத் தெரிவித்தார். இந்த அறிவிப்பின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். உத்தரப்பிரதேசத்தின் மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் தங்கள் கூட்டணி போட்டியிட உள்ளதாகவும் JP நட்டா தெரிவித்துள்ளார்.
Advertisement: