30.8 C
Chennai
May 15, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வில்லங்க சான்றுக்கு லஞ்சம் – அவினாசி பத்திரப்பதிவு தலைமை எழுத்தர் பணியிடை நீக்கம் 

அவினாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் தலைமை எழுத்தாளர் வில்லங்க சான்று வழங்க லஞ்சம் கேட்டதாக வீடியோ வெளியான நிலையில்,  கோவை மண்டல துணை பதிவாளர் அவரை பணியிடை  நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே பத்திர பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அவினாசி சுற்றுவட்டாரத்தில் உள்ள 31 ஊராட்சி பகுதிகளில் நிலம் ,  வீடு , இடம் வாங்க விற்க பொதுமக்கள் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடக்கும் அலுவலகங்களில் அவினாசி பத்திரப்பதிவு அலுவலகம் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் கருவலூரைச்  சேர்ந்த ஒருவர் அவினாசியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்கச் சான்று பெற அலுவலக தலைமை எழுத்தர் தனபாலிடம்
விவரம் கேட்டுள்ளார். அதற்கு அவர், அலுவலக கட்டணம் 121 என்றும், ஒரு வில்லங்கச் சான்று பெற பக்கங்கள் அடிப்படையில் சுமார் பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என கேட்டுள்ளார்.
இதனை அவர்,  வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவினாசி பத்திரப்பதிவு தலைமை எழுத்தர் தனபாலை பணியிடை இயக்கம் செய்து கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் சாமிநாதன்  உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading